tamilnadu

தேவையின்றி வெளியே சுற்றிய 6384 பேர் மீது வழக்கு

திருநெல்வேலி, மே 20- நெல்லை மாவட்டத்தில் தேவையின்றி வெளியே சுற்றியதாக மொத்தம் 6384 நபர்கள்  மீது 4316 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளை தவிர்த்து மற்ற  காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்ப டும் என காவல் துறையினரின் மூலம் அறி வுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை 144 தடை உத்த ரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே  சுற்றித் திரிந்த 6384 நபர்கள் மீது 4316  வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமி ருந்து 4280 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட் டுள்ளன.

;