tamilnadu

img

கபசுரக் குடிநீர் வழங்கல்

திருவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பெருமாள் சேரி, மேட்டு தெரு பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேட்டு தெருவில் இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் சிஐடியு மற்றும் வி விட்டமின் குளோபல் அமைப்பும் இணைந்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினர்.

இந்நிகழ்வில் வி விட்டமின்  அமைப்பின் நிர்வாகி ஜெஸ்லின் ஏஞ்சலா, கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கணேசன் ,மாதர் சங்கத்தின் சார்பில் ரெங்கம்மாள் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பெருமாள் சேரி பகுதியில் கமலா நடராஜன் அறக்கட்டளை ஆனந்த வித்யாலயா பள்ளி மற்றும் சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து பகுதி மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கின. நிகழ்வில் சிபிஎம் நகரச் செயலாளர் ஜெயக்குமார், கட்டுமான சங்கத்தின் கிளை  நிர்வாகி தங்க கொடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

;