tamilnadu

img

நீதிமன்றக் காவலுக்கு எதிராகவும் ஜாமீன் கோரியும் ப.சிதம்பரம் மனு

புதுதில்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதற்கு எதிராகவும் ஜாமீன் கோரியும் தில்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம்சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்தியநிதியமைச்சர் ப.சிதம்பரம், விசாரணைக்குப் பிறகு நீதிமன்றக் காவலில்திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 19 ஆம் தேதி வரை அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார்.இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் தில்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் புதனன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதை  எதிர்த்தும் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

;