நாம் வாழ்ந்துவரக்கூடிய வரலாற்று காலகட்டம், உலகமே சோசலிசத்தை நோக்கி மாறிச் செல்வதற்கான காலகட்டம் எனலாம். முதலாளித்துவச் சுரண்டல் உச்சம் தொட்டிருக்கும் இன்றைய ஏகாதிபத்திய கட்டத்தில் இருந்து, ஒரு மனிதர் இன்னொருவரை சுரண்டாத, ஒரு நாடு மற்றொரு நாட்டை சுரண்டாத சோசலிச அமைப்பை நோக்கி பயணிப்பதற்கான போராட்டமே, சோசலிசத்திற்கான போராட்டம் ஆகும். இந்த போராட்டம் கடுமையானது. மிக அவசியமானது.