திருவாரூர், ஏப்.18 - திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்தில், களப்பால் கிராமத்தில் உள்ள நினைவு இடத்தில் தியாகி களப்பால் குப்புவின் 76 ஆவது நினைவு தினத்தையொட்டி நினைவேந்தல்-வீரவணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. களப்பால் கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள வர்க்கப் போராட்ட களப்போராளி தியாகி களப்பால் உருவச் சிலைக்கு சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். நிகழ்வில் கோட்டூர் ஒன்றியச் செயலாளர் எல்.சண்முகவேல், விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கே.கோவிந்தராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் மாரியப்பன் மற்றும் தியாகி களப்பாலின் மூத்த புதல்வர் ஏ.ஆர்.கணேசன் மற்றும் பலர் வீரவணக்கம்செலுத்தினர்.