tamilnadu

img

வங்கிகள் வழக்கம் போல் செயல்படும்

சென்னை, ஏப்.1- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும், காலை 10 மணி முதல், மாலை 4 மணி வரையில் இயங்க வேண்டும் என வங்கிகள் கூட்டமைப்பிற்கு தலைமை வகிக்கும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளி யிட்ட அறிக்கையில், கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள், பல்வேறு நிவா ரண நிதியுதவிகளை அறிவித்தி ருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவிகளையும், முதியோர் ஓய்கூதிய தொகை யையும், அவற்றின் பயனா ளர்களான பொதுமக்கள், வங்கிக ளுக்கு நேரில் வந்து தடையின்றி பெறுவதற் கான  ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்  பட்டுள்ளது. அவ்வாறு, வாடிக்கையா ளர்கள் வரும்போது, சானிடை சரால் கைகளை தூய்மை செய்து கொள் வதை உறுதி  செய்வதோடு, குறைந்த பட்சம் ஒரு மீட்டர் என்ற  சமூக விலகலை கடைபிடிக்க வும், வங்கிகள் அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;