tamilnadu

img

கோவையில் பாலியல் பலத்காரத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் கைது 

துப்புரவு தொழிலாளியிடம் பாலியல் பலத்காரம்

கோவையில் பாஜக தலைவர் கைது 

துப்புரவு தொழிலாளியை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட பாஜக எஸ்.சி எஸ்டி அணி தலைவர் ஜோதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை வரதராஜபுரத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு ஒப்பந்த பணியில் ஏராளமான ஆண் மற்றும் பெண் துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் புதனன்று இரவு பெண் துப்புரவு தொழிலாளி ஒருவர் பெண்கள் கழிவறையை சுத்தம் செய்ய சென்றுள்ளார். அப்போது பின் தொடர்ந்து உக்கடம் பகுதியை சேர்ந்த அதே மருத்துவமனையில் பணியாற்றும் பாஜக எஸ்சி எஸ்டி அணித்தலைவர்  ஜோதி என்பவர் அத்துமீறி பெண்கள் கழிப்பறைக்குள் நுழைந்துள்ளார். அங்கு சுத்தம் செய்து கொண்டிருந்து பெண் துப்புரவு தொழிலாளியிடம் பாலியல் பலாத்கார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த பெண் அலறல் சத்தம் இடவே கோபமடைந்த ஜோதி பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார். இதனையடுத்து சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் துப்புரவு தொழிலாளி புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து ஜோதியின் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (பிரிவு 75) மற்றும் இந்திய தண்டனை சட்டம் 506 கொலை முயற்சி, 323 கொடும் காயம் ஏற்படுத்துதால் ஆகிய பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதுகுறித்து மருத்துவனையில் பணியாற்றும் சக துப்புரவு தொழிலாளர்கள் கூறுகையில், பாஜகவின் எஸ்சி,எஸ்டி பிரிவின் பொறுப்பாளராகவும், தமிழ்நாடு தூய்மை காவலர் பொது தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவராகவும் உள்ள பாஜக பிரமுகர் ஜோதி தன்னுடன் பணியாற்றும் துப்புரவு தொழிலாளி ஒருவரையே பாலியல் பலத்கார முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

;