tamilnadu

12 ஆம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஏப்.19-12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளியன்று(ஏப்.19) வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை பெறுவதற்கும், மறுகூட்டலுக்கும் 22ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளியன்று(ஏப்.19) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. சனிக்கிழமை காலை 9 மணி முதல் 26 ஆம் தேதி வரை மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி, தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் வழியாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப் பட்ட தங்களுடைய மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.விடைத்தாள் நகல் பெற மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வருகிற 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன்-2019 சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும். சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 6 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரையிலும், 11 ஆம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

;