மதுரை, மார்ச் 30- ஊரடங்கை மீற நூறு காரணங்கள், வழிகள் இருக்கலாம். ஆனால் கொரோனா வில் இருந்து தப்பிக்க கிடைத்திருக்கும் ஒரே வழி தனித்திருத்தல் மட்டும்தான் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறினார். மதுரை மாவட்டத்தில் கொரானோ தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆட்சியரை திங்களன்று சந்தித்த சு.வெங்கடேசன் பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஞாயிற்றுக்கிழமை மதுரையின் பொது வெளியில் கூடிய மக்கள் கூட்டம் அனைவ ரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கொரோனாவினால் தமிழகத்தின் முதல் உயிரிழப்பு மதுரையில் தான் நிகழ்ந் துள்ளது. இதுவே நாம் மேலும் கவனத்தோடு இருக்கவேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்துகிறது. மாவட்ட நிர்வாகமும் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளுக்கான உதவிக ளைச் செய்வதற்கு தன்னார்வக்குழுக்களை அமைத்துள்ளது. தமிழக அரசு போர்க்கால அடிப்படை யில் மருத்துவமனையில் பணியாற்றுவோ ருக்கு தகுந்த பாதுகாப்பு ஆயத்த (பிபிஇ) உடைகளையும், என்-95 முகக் கவசங்களை யும் உடனடியாக வழங்க வேண்டுமென்றார்.