உதகை, மே 3- முதுமலை புலிகள் காப் பகத்தின் உள்மண்டல வனப் பகுதிகளில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கியது. நீலகிரி மாவட்டம், முது மலை புலிகள் காப்பகத்தின் உள்மண்டல வனச் சரகங்க ளான தெப்பக்காடு, காா்குடி, முதுமலை மற்றும் நெலாக் கோட்டை வனச் சரகங்க ளில் தேசிய புலிகள் பாது காப்பு ஆணையத்தின் வழி காட்டுதலின்பேரில், பருவ மழைக்கு முந்தைய வன விலங்குகள் கணக்கெடுக் கும் பணிகள் தொடங்கியுள் ளது. இந்தக் கணக்கெடுப் பில் பயிற்சி பெற்ற வனத் துறை ஊழியர்கள், ஆராய்ச் சியாளர்கள் மற்றும் தன்னார் வலர்கள் என மொத்தம் 185 பேர் 37 குழுக்களாக பிரிந்து வனப் பகுதியில் நேரடியாக பார்த்து கணக்கெடுத்தல், மறைமுக கணக்கெடுப்பு, வன விலங்குகளின் எச்சம், கால் தடம், மரக்கீறல்கள் போன்ற வற்றை செயலிகளில் பதிவு செய்து வருகின்றனர்.