ஆக.17 இல் ‘வருகையில்லா ஆவணப் பதிவு’ திட்டம் துவக்கம்: அமைச்சர் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தகவல்
கோவை, ஆக.14-பொதுமக்கள் நேரில் வராமல், ஆன்லைன் மூலம் ஆவணப்பதிவு செய்யும் வகையில், ‘வருகையில்லா ஆவணப் பதிவு’ திட்டம் ஆக.17 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளதென வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.



















