districts

img

சமூகவிரோதிகள் அராஜகம் ஆட்டோ சங்க கொடி மரம் பெயர்ப்பலகை சேதம்

சென்னை, மே 2 - ஆட்டோ நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த கொடி மரம், பெயர்ப்பலகையை சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ளனர். ஆட்டோ டாக்சி ஓட்டுநர்  சங்கத்தின் புதிய கிளை முகலிவாக்கத்தில் உதயமாகி உள்ளது. இந்த கிளைக்கு திருவள்ளுவர் ஆட்டோ நிறுத்தம் என பெயர் சூட்டப்பட்டது. மே தினத்தன்று நிறுத்த திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக புதிய கொடிக்  கம்பம், பெயர்ப்பலகை நடப்பட்டு, தொழிலாளர் கள் தங்களது குடும்பத் தினருடன் திரண்டு இருந்த னர். விழா தொடங்க இருந்த நேரத்தில் அங்கு வந்த சுமார் 20 பேர் கொண்ட கும்பல், தொழிலாளர்களை மிரட்டி நிகழ்ச்சியை ரத்து கூறியுள்ளனர். கொடிக்கம்பத்தையும், பெயர்ப் பலகையையும் அகற்ற வற்புறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்த போது, காஜா மொய்தீன்  உள்ளிட்ட ஓட்டுநர்களையும், பெண்களையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது. மேலும், கொடி கம்பம், பெயர்ப்பலகையை பிடுங்கி எறிந்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் ஆலந்தூர் மேற்கு பகுதி தலைவர் கே.கண்ணன், மாங்காடு காவல்நிலையத்தில் புகார்  அளித்துள்ளார். அதில்,  கூட்டமாக வந்து கொடிக் கம்பம், பெயர்ப்பலகையை சேதப்படுத்தி, தாக்குதல் நடத்திய முருகேஷ் த/பெ எஸ்.சிவக்குமார் உள்ளிட்டு  அடையாளம் தெரியாத கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கூறப்பட்டுள்ளது.

;