districts

img

போதையற்ற தமிழ்நாடு கையெழுத்து இயக்கம்

ராணிப்பேட்டை,பிப்.28- போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் இறையூரில் நடைபெற்றது. பாச்சல் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் வி.லதா துவக்கி வைத்தார். வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.எம்.பிரகாஷ், மாவட்டத் தலைவர் சி.முருகன், மாணவர் சங்கம் மாவட்டச்  செயலாளர் கோபிநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் சங்கத்தின் வாலாஜா தாலுகா தலைவர் ம. ஜெயகாந்தன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு வாழ்த்து தெரிவித்தனர். மாவட்டச் செயலாளர் கோவலன், பொருளாளர் கலைவாணன், இணைச் செயலாளர் ராஜசேகர் மற்றும் துணைச் செயலாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;