districts

தொடர்ந்து 12 ஆண்டுகளாக பார்வைத் திறன் குறையுடையோர் அரசுப் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி

தஞ்சாவூர், மே 10 -  தஞ்சாவூரில் தொடர்ந்து 12 ஆண்டுகளாக நூறு  சதவீதம் தேர்ச்சியை பெற்று வருகிறது பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளி. தஞ்சாவூர் மேம்பாலம் அருகே, மாற்றுத் திறனாளி களுக்கான மாநில ஆணையரகத்தின்கீழ், பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை  நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வை ஐந்து மாணவிகளும், 14 மாண வர்களும் என 19 பேர் எழுதினர்.  இதில் தேர்வு எழுதிய 19 பேரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சியை இப்பள்ளி பெற்றுள்ளது.  தொடர்ந்து இப்பள்ளி 10 ஆம்  வகுப்பு தேர்வில், 12 ஆண்டுகளாக  100 சதவீத தேர்ச்சியை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

;