districts

சிஐடியு ஆட்டோ சங்க புதிய கிளை துவக்கம்

கரூர், மே 5- கரூரில் சிஐடியு ஆட்டோ சங்கத்தின் புதிய  கிளை செங்கொடி ஏற்றி துவக்கப்பட்டது. கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சிக்குட் பட்ட புலியூர் கடைவீதியில் அறிஞர் அண்ணா   டெம்போ, ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சிஐ டியு) புதிய கிளை துவக்கப்பட்டது. துவக்க விழாவிற்கு கிளைத் தலைவர் ஜெ.சந்திரசேகர் தலைமை வகித்தார். கிளைச்  செயலாளர் கே.ராஜேஷ் வரவேற்று பேசினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, ஆட்டோ சங்க பெயர் பலகையை திறந்து வைத்து  பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி. ஜீவானந்தம், சங்கத்தின் செங்கொடியை ஏற்றி வைத்து பேசினார்.  மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், சிபிஎம் கரூர் மாநகரச் செயலாளர் எம். தண்டபாணி, சிஐடியு மாவட்டக் குழு உறுப் பினர்கள் எம்.சுப்பிரமணியன், ரெங்கராஜ், பாலசுப்பிரமணியன், ப.சரவணன், கா.கந்த சாமி, பெரியசாமி, கிளை துணைத் தலைவர்  சரவணன், துணைச் செயலாளர்கள் விக்ர மன், பிரபாகரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கிளைப் பொருளாளர் பாலுசாமி நன்றி கூறினார். ஆட்டோ நிலையத்தில் ஆட்டோ, டெம் போக்களை நிரந்தரமாக நிறுத்துவதற்கு புலியூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

;