districts

மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்ற கையெழுத்து இயக்கம்

புதுக்கோட்டை, ஆக.22-  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.  அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் அ.ரகமதுல்லா தலைமை வகித்தார். செய லாளர் எம்.சின்னராசு வரவேற்றார். மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.  அப்போது அவர் பேசும்போது, நாட்டில் அறிவியலுக்கு எதிராக பல்வேறு சாதி, மதவெறிப் போக்குகளும், மூட  நம்பிக்கைகளும் ஊட்டி வளர்க்கப்படு கிறது. போலி அறிவியல் மேல் மட்டத்தில் உள்ள பொறுப்பான மனிதர்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது. மக்கள்  அறி வியல் மனப்பான்மையுடன் மற்றும் மனித நேயத்துடன் வாழ மூடநம்பிக்கை ஒளிப்புச்  சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றும் பேசினார். கையெழுத்து இயக்கத்தில் அறிவி யல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர்  முனைவர் ரெ.பிச்சைமுத்து, எழுத்தாளர் அண்டனூர் சுரா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

;