india

img

குறைந்துவரும் கொரோனா பாதிப்பு..

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குணமடை வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  இந்தியாவில் புதிதாக 1,32,788 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,207 பேர் கொரோனாபாதிப்பால் உயிரிழந்தனர்.  அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 456 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்த வர்களின் எண்ணிக்கை 2 கோடியே 61 லட்சத்து 79 ஆயிரத்து 085 பேராக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 17,93,645 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் 344 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதத்துக்கும் கீழாக உள்ளது, 30 மாநிலங்களில் கடந்த வாரம் முதல் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மே 7-ந் தேதி பதிவு செய்யப்பட்ட உச்ச நிலையில் இருந்து கொரோனா தொற்று பாதிப்பு தற்போது 69 சதவீதம்குறைந்துள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

;