states

img

இந்தியா கூட்டணியை ஆதரித்து பால்கரில் சிபிஎம் மாபெரும் பொதுக்கூட்டம்

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் (பழங்குடி) தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சிவசேனா வேட்பாளர் பாரதி காம்டியை ஆதரித்து, போய்சர் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இதில், சிவசேனா (யுபிடி) சார்பில் அதன் தலைவர் உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் டாக்டர் அசோக் தாவ்லே, மாநில செயற்குழு உறுப்பினர் வினோத் நிகோல் எம்.எல்.ஏ.,  என்சிபி எம்எல்ஏ சுனில் புசாரா, காங்கிரஸ். மாவட்டத் தலைவர் பிரபுல் பாட்டீல், கஷ்டகாரி சங்கதனா தலைவர் பிரையன் லோபோ, வத்வான் துறைமுக எதிர்ப்பு நடவடிக்கைக் குழு தலைவர் நாராயண் பாட்டீல்,  சிவசேனா வேட்பாளர் பாரதி காம்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மகாராஷ்டிராவில் ஹிங்கோலி, திந்தேனி தொகுதிகளில் சிபிஎம் போட்டியிடுகிறது.

;