states

img

ராஜஸ்தான்: எண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி  

ராஜஸ்தானில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.  

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜாம்வா ராம்கரில் டர்பெண்டைன் ஆயில் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.    

இதுகுறித்து ஜாம்வா ராம்கர் வட்ட அதிகாரி ஷிவ்குமார் பரத்வாஜ் கூறுகையில், பெயிண்ட் செய்ய பயன்படுத்தபடும் டர்பெண்டைன் ஆயில் பேக்கிங் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். 

;