tamilnadu

img

தோழர் எ.எஸ்.கிருஷ்ணன்குட்டி நினைவுதினம்

அருமனை:
கன்னியாகுமாரி மாவட்டம் அருமனையில் தோழர் எ.எஸ்.கிருஷ்ணன்குட்டி நான்காவது ஆண்டுநினைவுதினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.குமரி மாவட்டத்தின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) வளா்ச்சிக்குஅரும்பாடுபட்டவர் எ.எஸ்.கிருஷ்ணன்குட்டி இவர் அருமனை நெடியசாலையில் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர். சிறு வயதிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியுடன் பற்றுதல் கொண்டு வளர்ந்தவர்பின்னர் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு மக்கள் பணியாற்ற துவங்கினார். இவரின் பணி ஏழை எளிய மக்களுக்காக அமைந்தது. மக்களின் பிரச்சனைகளுக்காக கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சியுடன் அதிகம் தொடர்பு வைத்துள்ளவர். அதற்கான தீர்வும் கிடைக்கும். பின்னர் கட்சியின் தாலுகாபொறுப்பாளராகவும் மாவட்டக்குழு உறுப்பினராகவும் அருமனை கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் அருமனை பேரூராட்சி தலைவராகவும் திறம்பட செயல்பட்டார். 2016 ஜூன் 27 ஆம் தேதி காலமானார். 

அவரது நினைவுதினத்தை முன் னிட்டு, அருமனை நெடியசாலையில் அமைந்துள்ள நினைவு ஸ்தூபியில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ் கொடியேற்றி மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். வட்டாரச் செயலாளர் சசிகுமார், வட்டாரக்குழு உறுப்பினர் மூா்த்தி, ரமேஷ், வாலிவர் சங்க பொறுப்பாளர்கள் ஐயப்பன், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;