tamilnadu

தென்னிலை பகுதியில் வி.செந்தில்பாலாஜி வாக்கு சேகரிப்பு

கரூர், மே 4-அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு ட்பட்ட தென்னிலை தெற்கு, குப்பம் ஊராட்சி மாலக்கோயில் காலனி, பூலாக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்து திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி பேசுகையில், அரவக்குறிச்சி தொகுதியில் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இருக்கிறது. அதனால் வீட்டுக்கு வீடு காவிரிக் குடிநீர் கிடைக்கும் வகையில் திட்டம் கொண்டு வரப்படும். 100 நாள் வேலைக்கு செல்வோருக்கு சம்பளம் கிடைக்க மூன்று மாதமாகுது. திமுக ஆட்சிக்கு வந்ததும் வேலை செய்யும் இடத்திலேயே தொழிலாளர் கையில் சம்பளம் கிடைக்கும். 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக மாற்றப்படும் என்றார்.பிரச்சாரத்தின் போது திமுக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், திமுக நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், காங்.மக்களவைத் தொகுதி வேட்பாளர் செ.ஜோதிமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடனிருந்தனர்.   

;