tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ‘மே தின’ வாழ்த்து!!

சென்னை, ஏப். 30 - “மே தின’ தியாக வரலாறு களின் வழித்தடத்தில் தொடர்ந்து சம ரசமற்ற போராட்டங்களை முன்னெ டுக்க மே தினத்தில் உறுதியேற் போம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத் துள்ளது.

138-ஆவது மே தினத்தை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள் ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்ப தாவது:

தொழிலாளர் - விவசாயிகள் ஒற்றுமையை கட்டி எழுப்புவோம்!
கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினருக் கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது 138வது மே தின புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
 

அனைத்து வகையான சமூக ஒடுக்குமுறைகளுக்கும் - சுரண்டல் களுக்கும் முடிவு கட்டி சமத்துவ சமூகத்தை உருவாக்குவோம். சம  வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்த ரம், பணி பாதுகாப்பு, பாலின சமத்து வம் உள்ளிட்ட தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்க பரந்து பட்ட தொழிலாளி - விவசாயி ஒற்றுமையை கட்டி வலுமிக்க போராட்டங்களை முன்னெடுக்க இந்த மே தினத்தில் உறுதியேற்போம்.

ஹேமார்க்கெட் சதுக்கத்தில் தியாகிகள் சிந்திய ரத்தம்
உலகெங்கும் தொழிலாளி வர்க்கத்தினுடைய உரிமை களுக்காக 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் நடைபெற்றுக் கொண்டி ருந்த போராட்டம் உக்கிரம் அடைந் தது. அமெரிக்காவின் சிகாகோ  நகர தெருக்களில் இறங்கி தொழி லாளி வர்க்கம் வீரஞ்செறிந்த போராட் டங்களை நடத்தியது. எட்டு மணி நேர வேலை, பணிப் பாதுகாப்பு, தொழி லாளர்களுக்கான உரிமைகள் ஆகி யவற்றை முன்வைத்து நடத்தப் பட்ட போராட்டத்தை முடக்க அர சாங்கத்தினால் ஹேமார்க்கெட் சதுக் கத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தொழிலாளர் தலைவர்கள் கொல்லப்பட்டனர். 

மதம், இனம், மொழி தாண்டி கொண்டாடப்படும் மே தினம்
அந்த தியாகத்தை நினைவு கூரும் வகையில் இரண்டாவது கம்யூ னிஸ்ட் அகிலம் 1889-இல் உலகத் தொழிலாளர் இயக்கம் ஆண்டு தோறும் தொழிலாளர்கள் உரிமை களுக்கான தினமாக - மே முதல் நாளை - மே தினமாக - கொண்டாட வேண்டுமென்று அறைகூவல்  விடுத்தது. அதன்படி உலகம் முழு வதும் மதம், இனம், மொழி வேறு பாடின்றி தொழிலாளர்கள் மே தினத் தைக் கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் முதன் முதலில் மே தினத்தை கொண்டாடிய பெருமை தமிழகத்தைச் சார்ந்த தோழர் சிங்காரவேலர் அவர்களையேச் சேரும்.

போராடிப் பெற்ற உரிமையை காவுகொடுத்த மோடி அரசு
கடந்த 10 ஆண்டு காலத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு முற்றிலும் தொழிலாளர் விரோத - விவசாயிகள் விரோத - விவசாய தொழிலாளர்கள் விரோத - ஒட்டுமொத்தத்தில் மக்கள் விரோத அரசாக செயல்பட்டது. தொழி லாளர் நலச் சட்டங்களை எல்லாம் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றியது. பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளின் நலன்களை காப்ப தற்காக தொழிலாளர்களின் நலன் கள் அனைத்தையும் காவு கொடுத்தது. கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து அவர்களது உழைப்பை உறிஞ்சி அந்த செல்வங்களை எல்லாம் பெரும் கார்ப்பரேட் முத லாளிகளுக்கும் மெகா பணக்காரர் களுக்கும் மடை மாற்றியது.

1 சதவிகித முதலாளிகளின் கையில் 40 சதவிகித சொத்து
நாட்டின் மக்கள் தொகையில் வெறும் ஒரு சதவிகிதம் அளவிற்கு உள்ள பெரும் பணக்காரர்கள், பெரும் முதலாளிகளின் கைகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற் பத்தியில் 40 சதவிகிதத்தை கொண்டு  போய் சேர்த்தது மோடி அரசு. அதே வேளையில் மக்கள் தொகையில் கீழ் மட்டத்தில் உள்ள 50 சதவிகிதமாக இருக்கக்கூடிய ஏழை - எளிய தொழி லாளர்கள், நடுத்தர வர்க்க மக்களின் கைகளில் வெறும் 13 சதவிகித வரு மானத்தை மட்டுமே விட்டு வைத்துள் ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஏழை கள் பரம ஏழைகளாகவும் வறிய வர்களாகவும் ஆக்கப்பட்டனர்.

நம்பிக்கை அளிக்கும் விதமாக வீறுகொண்டு எழும் இந்தியா
இத்தகைய ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் இயங்கி வரும்  நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்திட நாடு முழுவதும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மதச்சார் பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டுள் ளன. நடைபெற்றுக்கொண்டிருக்கும் மக்க ளவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி மதச் சார்பற்ற அரசினை ஏற்படுத்திட நாடு முழுவ தும் மக்கள் வீறுகொண்டு எழுந்துள்ளது மகிழ்ச்சிக்குரியதாகும். அதேசமயம், மோடி அரசின் தாராளமய, கார்ப்பரேட் மயக் கொள்கைகளை எதிர்த்தும், பறிக்கப்பட்ட உரிமைகளையும், உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரங்களையும் மீட்டெடுப்ப தற்கான வீரஞ்செறிந்த போராட்டங்களை முன்னெடுக்க இந்த மே தின நன்னாளில் உறுதியேற்போம்.

மீள முடியாத நெருக்கடியில் உலக முதலாளித்துவம்!
இன்றைய சூழலில் உலக முதலாளித்து வம் மீள முடியாத நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. தங்களது லாப வேட்டையை அதிகரிக்க உழைப்பாளி மக்கள் மற்றும் மூன்றாம் உலக நாடுகள் மீது கொடும் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்கா இஸ்ரேலை ஏவிவிட்டு பாலஸ்தீனத்தின் மீது கொடூரத் தாக்குதலை நடத்தி வரு கிறது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தை கள் உட்பட 50 ஆயிரம் பேர் இதுவரை கொல் லப்பட்டுள்ளனர். அதே போல உக்ரைனைக் கைப்பாவையாக பயன்படுத்தி ஒரு நீண்ட போரினை அமெரிக்க ஏகாதிபத்தியம் தூண்டிவிட்டு குளிர் காய்ந்து கொண்டி ருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள செல் வங்களை, இயற்கை வளங்களை கொள் ளையடித்து உலகப் பெரும் பணக்காரர்கள் கைகளில் கொண்டு சேர்ப்பதற்காக உலக முதலாளித்துவம் சென்று கொண்டி ருக்கிறது.

எழுச்சிபெரும் சர்வதேச தொழிலாளர் வர்க்கம்
அதே வேளையில், முதலாளித்துவத்தி ற்கு எதிராக உலகம் முழுவதும் தொழிலா ளர் வர்க்கம் பிரம்மாண்டமான போராட்டங்க ளை நடத்தி வருகிறது. லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட பல நாடுகளில் தொழிலாளி வர்க்கம் எழுச்சி பெற்று வரு வது மகிழ்ச்சிக்குரியதாகும். இந்தியாவி லும் அத்தகைய போராட்டங்களை முன்னெ டுத்து பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை உறுதி செய்வதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றென்றும் முன் நிற்கும்.

சமூக மாற்றத்தையும், சமதர்ம சமூ கத்தையும் உலகெங்கும் கொண்டு வரு வதில் தொழிலாளி வர்க்கத்தின் வீரஞ் செறிந்த வர்க்க கடமையை உணர்ந்துள்ள  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின தியாக வரலாறுகளின் வழித்தடத்தில் தொடர்ந்து சமரசமற்ற போராட்டங்களை முன்னெடுக்க மே தினத்தில் உறுதியேற்கிறது.

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

;