tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்ட மணமக்கள்

திருவண்ணாமலை,பிப்.7- மத்திய பா.ஜ.க. அரசு  கொண்டுவந்துள்ள தேசிய குடியு ரிமை சட்டம் ,தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடுஆகியவற்றை திரும்பப் பெறக்  கோரிய, கையெழுத்து படிவத்தில் மணமக்கள் கையெ ழுத்திட்டனர். திருவண்ணாமலை அடுத்த பெருமணம் கிராமத்தில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் லூர்துமேரியின் மகள் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தின் போது, தேசிய குடியுரிமை திருத்தச்  சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசியமக்கள்  தொகை பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெறக்கோரிய  கையெழுத்து படிவவத்தில் மணமக்கள் கையெழுத்திட்டனர். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் பி. சுகந்தி, மாவட்டச் செய லாளர் எம்.சிவக்குமார், மாவட்ட நிர்வாகிகள் எம்.பிரகலநா தன், ராமதாஸ், பலராமன், எஸ்.ஆனந்தன், பன்னீர், அண்ணா மலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;