tamilnadu

img

நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள் முதல்வர் வாழ்த்து

சென்னை, மே 6- தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே  வெளியாகியிருக்கும் நிலையில்,  முதல்வர் ஸ்டாலின், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின்  தனது எக்ஸ் பக்கத்தில், “பள்ளிக்கல்வி யை நிறைவு செய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும்!

இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்.  அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு துணை யாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஸ்
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, “ பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்கள் அனை வருக்கும் வாழ்த்துகள். மதிப்பெண்கள் குறைவாக பெற்று உடனடித் தேர்வுகள் எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் தேர்வுகளை எதிர்கொள்ளும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெற்றி பெற்ற மாணவர்கள் என்றில்லாமல் தேர்வு எழுதிய அனைத்து மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்துக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு துணை நிற்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

;