tamilnadu

img

பழம்பெரும் இயக்குனர் காலமானார்

சென்னை:
பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தையும் இயக்குநருமான ஏபி.ராஜ் மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 95.1951 முதல் 1960 வரை 10 சிங்களப் படங்களை இயக்கிய ஏபி. ராஜ், பிறகு 65 மலையாளப் படங்களை இயக்கினார். இரு தமிழ்ப் படங்களையும் இயக்கியுள்ளார். இவருடைய மகளான சரண்யா பொன்வண்ணன், நாயகன் படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பிரபல நடிகையாக உள்ளார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.ஏபி.ராஜின் மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்கள்.

;