tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 2,532 பேருக்கு கொரோனா தொற்று...  

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினமும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். குறிப்பாக சென்னையில் கொரோனா தாக்கம் ஜெட் வேகத்தில் உள்ளது. 

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 59 ஆயிரத்து 377 ஆக உயர்ந்துள்ளது. முதன்முறையாக ஒரே நாளில் கொரோனா பலி  எண்ணிக்கை 50-யை தாண்டியுள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 53 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 757 ஆக அதிகரித்துள்ளது. ஆறுதல் செய்தியாக 1,438 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ள நிலையில், தமிழகத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 757 ஆக உயர்ந்துள்ளது. 

இன்றைய பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 1,493 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 41,172 ஆக உயர்ந்துள்ளது.   குறிப்பாக சென்னையில் மட்டும் 42 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 601 ஆக அதிகரித்துள்ளது.

;