தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ‘கள்ளக் கடல்' எனும் திடீர் கடல் அலை சீற்றம் மற்றும் கடல் கொந்தளிப்பு இன்றும் நாளையும் ஏற்படலாம் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக சிகப்பு நிற எச்சரிக்கை; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் (செங்கல்பட்டு) மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை; விழுப்புரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.