“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலி உட்பட வெள்ளி, நிலம், பணம் அனைத்தையும் பறித்து இஸ்லாமியருக்கு கொடுத்துவிடுவார்கள்” என்று மோடி பேசியுள்ளார். இவ்வளவு கேவலமான மனிதரை உலகம் கண்டதேயில்லை! மோடி போட்டியிடவும் பிரச்சாரம் செய்யவும் தேர்தல் ஆணையம் உடனே தடை விதிக்கவேண்டும்” என்று சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் வலியுறுத்தியுள்ளார்.