tamilnadu

img

பாடகி கனிகா கபூர் கொரோனாவில் இருந்து மீண்டார் 

லக்னோ
பாலிவுட் திரைத்துறையில் பிரபல பாடகியான கனிகா கபூர் கொரோனா வைரஸ் தோன்றிய காலத்தில் லண்டனுக்குச் சென்றுவிட்டு இந்தியா திரும்பினார். கொரோனா தாக்கம் பற்றி அவருக்குத் தெரியாத நிலையில், தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பிரபல நட்சத்திர ஹோட்டலிலும் தங்கி இருந்தார். 

அதன் பின்னர் தொடர்ச்சியாக உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில், 5 மருத்துவ முறை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 5 முறையும் கனிகாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. மேலும் கனிகா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்குபெற்ற  100-க்கும் மேற்பட்டோரைத் தனிமைப்படுத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் 6-வது முறையாக கனிகாவுக்கு பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனை முடிவில் கனிகாவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனத் தெரிய வர சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். வீட்டிலேயே ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் கனிகா கபூருக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.
 

;