tamilnadu

img

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது

சென்னை,மார்ச் 4- தமிழ்நாடு மற்றும் புதுச் சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு புதனன்று (மார்ச்4) தொடங்கியது. முதல் நாளில் தமிழ், பிரெஞ்சு, இந்தி, உருது, தெலுங்கு உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 8 லட்சத்து 32 ஆயிரத்து 475  பேர் எழுதுகின்றனர். தேர்  வையொட்டி 3,016 தேர்வு  மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 116 மையங் கள் அதிகமாகும். தேர்வு எழு தும் மாணவர்களுக்கு முதல் 10 நிமிடங்கள் வினாத் தாளை வாசிக்கவும், அடுத்த  5 நிமிடங்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மற்றும் சுய விவரங்கள் சரிபார்க்கவும் தரப்பட்டுள்ளது. சிறப்பு  சலுகையாக மாற்றுத்திற னாளிகளுக்கு மட்டும் ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்  கப்பட்டுள்ளது.

;