tamilnadu

img

அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் விலை கொடுத்து வாங்கப்பட்டவை இரா.முத்தரசன் சாடல்

புதுக்கோட்டை, ஏப்.1- அதிமுகவில் உள்ள கூட்டணிக் கட்சிகள் விலைகொடுத்து வாங்கப் பட்டவை என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்.தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக புதுக்கோட்டைக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியது: பாஜக- அதிமுக கூட்டணி தோல்விப் பயத்தினாலேயே திமுக நிர்வாகிகள் வீடுகளில்வருமான வரித்துறை சோதனைகளை நடத்தி வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தேர்தலுக்காக விலை கொடுத்து வாங்கப்பட்டது.திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு மக்களுக்கான போராட்டடங் களை இந்தக் கட்சிகள் இணைந்து நடத்தியுள்ளன. இது இயல்பாக உருவான கொள்கைக் கூட்டணி. இடதுசாரிகளை பொறுத்தவரை நாட்டில் மோடி தலைமையிலான பாசிச பாஜகஅதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே பிரதான இலக்கு. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். மே 23-க்குப் பிறகு மத்தியிலும் மாநிலத்திலும் நிச்சயம் ஆட்சி மாற்றம் நிகழும். இவ்வாறு இரா.முத்தரசன் கூறினார். பேட்டியில் மாவட்டச் செயலளர் மு.மாதவன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

;