tamilnadu

img

ஒவ்வொரு கட்டத்திலும் இடஒதுக்கீட்டை எதிர்த்தது ஆர்எஸ்எஸ், பாஜகதான்

உங்கள் கடிதத்தில், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் பறிக்கப்பட்டு மற்றவர்களுக்கு கொடுக்கப்படும் என்று கூறி யுள்ளீர்கள்.  குஜராத்தில் ஏழை பட்டியலின விவசாயிகளிடம் இருந்து மோசடி செய்து, பாஜகவுக்கு தேர்தல் பத்திரமாக  வழங்கப்பட்ட 10 கோடி ரூபாயை திருப்பித் தருமாறு உங்கள் கட்சிக்கு உத்தரவிடும்படி இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மீது பொய்களை கூறி வருகிறீர்கள். எனது முந்தைய கடிதத்தில் நான் குறிப்பிட்டது போல் வாக்குக்காக பிரிவினை மற்றும் வகுப்புவாதம் பேசும் பிரதமராக மட்டுமே உங்களை மக்கள் நினைவுகூர்வார்கள். 1947 முதல் இட ஒதுக்கீட்டை ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்த்தது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகதான். இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர அரசியல் சட்டத்தை மாற்ற நினைப்பது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தான் என்பது அனைவருக்கும் தெரியும். உங்கள்  தலைவர்கள் அதை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்கள்.  நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 16-ஆவது பிரிவின்படி மக்கள்தொகை அடிப்படையில் பட்டியலின, பழங்குடியின மற்றும் ஓபிசிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் என்பதை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.  மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர்

;