tamilnadu

img

நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டாரா? 

மும்பை
இந்தி திரையுலகில் வளரும் நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் (34) மும்பையில் உள்ள தனது வீட்டில் ஞாயிறன்று தற்கொலை செய்து கொண்டார். 

அவர் தற்கொலை செய்யப்பட்ட அறையில் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், முதல் கட்ட விசாரணை மற்றும் ஆய்வுக்கு பின் சுஷாந்த் சிங் தற்கொலை செய்தார் என  போலீசார் உறுதி செய்தனர். காரண செய்தியாக கடந்த 6 மாத காலமாக மனஅழுத்த பிரச்சனைக்கு சுஷாந்த் சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகவும் போலீசார் கூறினர். 

தற்போது போலீசார் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட நேரத்தில், சமையற்காரர்கள் இருவரும், வீட்டு வேலை செய்யும் நபர் ஒருவரும், அவருடைய நண்பர் ஒருவர் வீட்டில் இருந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர  விசாரணை செய்து வரும் நிலையில், சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், போலீஸ் விசாரணை வேண்டும் எனவும் சுஷாந்த் சிங்கின் தாய்மாமன் தெரிவித்துள்ளார். 

மேலும் சுஷாந்த் சிங்கிற்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இது தற்கொலை அல்ல, இறப்பில் ஏதோ சதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சுஷாந்த் சிங்கின் மரணம் அடுத்த கட்ட நகர்விற்கு சென்றுள்ளது.  

;