tamilnadu

img

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து - உயிரிழப்பு 8 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில், சுதர்சன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில், இன்று எதிர்பாராத விதமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. தீ  அடுத்தடுத்து உள்ள 7 அறைகளுக்கும் பரவியதில் அங்கிருந்த பட்டாசுகளும் வெடித்து பெறும் விபத்து ஏற்பட்டது. விபத்தின் போது 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அவ்விடத்தில் பணியிலிருந்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உராய்வு காரணமாக ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

;