districts

சென்னையில் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் அகற்றம்

சென்னை, ஜன. 27- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து அனைத்து  மாவட்டங்களிலும் உள்ளாட்சி அதிகாரிகளும் நடத்தை விதிகளை  முறையாக கடைபிடிக்க களம் இறங்கியுள்ளனர். உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் கட்சியினர் அனைத்து இடங்களி லும் சுவரொட்டிகளை ஒட்டி இருந்தனர். பல இடங்களில் சுவர்  விளம்பரங்களும் செய்யப்பட்டு இருந்தன. இதுபோன்ற சுவரொட்டிகளை அகற்றும் பணியிலும், சுவர் விளம்பரங் களை அழிக்கும் பணியில் மாந கராட்சி, நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையிலும் மாநக ராட்சி ஊழியர்கள் சாலை ஓரங்க ளில் ஒட்டப்பட்டு இருந்த சுவர்  விளம்பரங்களை அப்புறப்படுத் தும் பணியில் ஈடுபட்டனர். வேப்பேரி, புரசைவாக்கம், தி.நகர், வடபழனி, கோயம்பேடு, மதுரவாயல், பெரம்பூர், மாத வரம், பாரிமுனை, மயிலாப்பூர் உள்ளிட்ட அனைத்து இடங்களி லும் பாலங்கள் மற்றும் சுவர்க ளில் ஒட்டப்பட்டு இருந்த  சுவரொட்டிகள் அப்புறப்படுத்தப் பட்டன.

;