india

img

விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கச் சொன்னதே மோடி அரசுதான்... மகாராஷ்டிர பாஜகவினருக்கு உத்தவ் தாக்கரே பதிலடி....

மும்பை:
கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டிய உறியடித் திருவிழா மற்றும் செப்டம்பர் 10-ஆம் தேதி வரவுள்ள விநாயகர் சதுர்த்திஊர்வலங்களுக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.கொரோனா தொற்றுப் பரவல் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, தனிமனிதஇடைவெளியை உறுதிப்படுத்தும் வகை யில் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடைவிதித்துள்ளது.

ஆனால், இந்துக்களின் திருவிழாக்களை திட்டமிட்டு தடை செய்யும் வகையிலேயே உத்தவ் தாக்கரே அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக பாஜக வினர் மகாராஷ்டிராவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.இதையடுத்து, கொரோனா பரவல்அபாயம் காரணமாகவே உறியடி திருவிழா, விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், இந்த கட்டுப்பாடுகளை விதிக்கச் சொன்
னதே ஒன்றிய அரசுதான் என்றும் பாஜகவினருக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே பதிலடி கொடுத்துள்ளார். மேலும், பாஜகவினர் விரும்பினால் அந்த கடிதத்தை காட்டத் தயார் என்றும் கூறியுள்ளார்.

கர்நாடக மாநில பாஜக அரசும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அங்கும் “விநாயகர் சதுர்த்தி வரும்போதுதான், கொரோனா நினைவுக்கு வருகிறதா?எங்கள் பண்டிகைக்கு முட்டுக்கட்டை போட்டால், அமைதியாக இருக்கமாட் டோம்’’ என்று பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் உள்ளிட்டோர் மிரட்டல்விடுத்துள்ளனர்.

;