states

img

குஜராத்: பாஜக பிரமுகர் அத்துமீறிய வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு!

குஜராத் மாநிலத்தில் பாஜக பிரமுகர் அத்துமீறிய வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் 25 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவின் போது, தாவூத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பார்தம்பூர் வாக்குச்சாவடியை பா.ஜ.க வேட்பாளர் ஜஸ்வந்த் சிங் பாபோரின் மகன் விஜய் பாபோர் கைப்பற்றி கள்ள ஓட்டுகளைப் போட்டு அதனை  தனது இன்ஸ்டாகிராம் நேரலையில் வெளியிட்டிருந்தார். இந்த அத்துமீறலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் விஜய் பாபோர் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில், வரும் மே 11-ஆம் தேதி பார்த்ம்பூரில் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பார்தம்பூர் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

;