tamilnadu

img

அன்று 15 லட்சம் கோடி, இன்று 20 லட்சம் கோடி... 133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு...

லக்னோ:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை மீட் டெடுக்க ரூ. 20 லட்சம் கோடி மதிப் பில் திட்டம் வைத்திருப்பதாக பிரதமர் மோடி சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார். பிரதமரின் அறிவிப்பில் அடங்கியுள்ள ரகசியம் விரைவில் வெளியிடப்படும் என்று, நிதியமைச்சர் நிர் மலா சீதாராமனும் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளார்.

இந்நிலையில், பிரதமரின் அறிவிப்பை சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் கடுமையாக சாடியுள்ளார். 2014 தேர்தலின் போது, வெளிநாடுகளில் உள்ள ரூ. 15 லட்சம் கோடிகறுப்புப் பணத்தை மீட்டு, அதனை ஒவ்வொரு இந்தியருக்கும் பகிர்ந்தளிப்பேன் என்று மோடி ஏமாற்றியதை நினைவுபடுத்தியுள்ளார்.“பிரதமர் முன்பு, ரூ. 15 லட்சம்கோடி என்று வாக்குறுதி அளித்தார்;இப்போது ரூ.20 லட்சம் கோடி அளிப்பதாக கூறுகிறார்” என்று குறிப்பிட் டுள்ளார்.

மேலும், “இந்த முறை மோடி அரசு அறிவித்த தொகையில் எத் தனை பூஜ்ஜியங்கள் என்று மக்கள் கேட்க மாட்டார்கள். மாறாக, எத்தனை பொய் வாக்குறுதிகள் என்றேகேட்பார்கள்” என்று குறிப்பிட் டுள்ள அகிலேஷ், “133 கோடி மக்களிடம் 133 முறை பொய்யான வாக்குறுதிகளை மோடி அரசு அளித்து விட்டது” என்றும் விமர்சித்துள்ளார்.

;