tamilnadu

img

நடப்பது நாட்டின் ஆன்மாவை மீட்டெடுக்கும் தேர்தல் பாஜகவை தோற்கடிப்பது வரலாற்றுக் கடமை! ஜிக்னேஷ் மேவானி அறைகூவல்

நடைபெறவுள்ள 17-ஆவது மக்களவைப் பொதுத்தேர்தல், வழக்கமான தேர்தல் போன்றதல்ல; மாறாக, தற்போது நடப்பது இந்தியாவின் ஆன்மாவை மீட்டெடுப்பதற்கான போராட்டம் என்று இளம் தலித் தலைவரும், குஜராத் எம்எல்ஏ-வுமான ஜிக்னேஷ் மேவானிகூறியுள்ளார்.மக்களவைத் தேர்தலையொட்டி, ஜிக்னேஷ் மேவானியை ‘பிரண்ட் லைன்ஏடு’ பேட்டி கண்டுள்ளது. அந்த பேட்டியின் முக்கியப் பகுதிகள் வருமாறு:


தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் குறித்த மோடி அரசாங்கத்தின்ஐந்து ஆண்டு காலச் செயற்பாடுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தக் கேள்விக்கான மிக எளிமையான, நேர்மையான பதிலை உங்களுக்குநான் தருகிறேன். இந்த ஐந்து ஆண்டுகள் மிகவும் பேரழிவு கொண்டதாக, அடக்குமுறை மிகுந்த காலமாக, மிகுந்த வலியைஏற்படுத்துகின்ற வகையில் பயங்கரமானதாகவே இருந்திருக்கிறது.


இந்த அரசாங்கத்தைப் பற்றியும்அதன் சர்வாதிகார போக்குகளைப்பற்றியும் உங்களைப் போன்றோர் பலரும் இவ்வாறாகவே கூறி வருகிறீர்கள். பயங்கரமானது என்றுஏன் அதைக் கூறுகிறீர்கள்?

ஆர்எஸ்எஸ் தன்னுடைய ஆதரவாளர்களை முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் எதிராகக் கட்டவிழ்த்து விட்டதுஎன்பதாலேயே அதை மிகவும் பயங்கரமானது என்று கூறுகிறோம். அவர்கள் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளின் குரலை நசுக்கி, அவர்களை மௌனமாக்க முயன்று வருகிறார்கள். உண்மையில் இந்தியா குறித்ததாக அவர்கள் கொண்டிருக்கும் கருத்துக்கள் அனைவராலும் எதிர்க்கப்படுகிறது. பிராமணிய ஆதிக்கத்தை அவர்கள் திணிக்க விரும்புகிறார்கள். இன்னும் ஆழமாகப் பார்த்தால், அவர்கள் இன்னமும் மனுஸ்மிருதியைக் கடைப்பிடிப்பதாக சத்தியம் செய்தவர்களாகவே இருக்கின்றார்கள்.


உனா சம்பவத்திற்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக இல்லாவிட்டலும் சுற்றி வளைத்து வருத்தத்தை வெளிப்படுத்தினார். அது தலித் சமூகத்திற்கு எந்த வகையிலாவது உதவியதா?

அவரது வருத்தம் மிகவும் தாமதமாக வெளிப்படுத்தப்பட்ட போதிலும், அவரது பேச்சுக்குப் பிறகு ஒரு நிம்மதியான உணர்வு இருந்தது. ஏனெனில் இதுஒரேயொரு முறை மட்டுமே நடக்கின்ற போராட்டமாகவோ அல்லது ஒரேயொரு முறை நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலாகவோ இருக்கவில்லை. பலமுனைகளில் இருந்தும் தலித்துகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. அத்தகைய தாக்குதல்களையெல்லாம் ஒருஉனா பேரணி மட்டுமே தடுத்து நிறுத்துவதாக இருக்கப் போவதில்லை. இந்த ஐந்து ஆண்டுகளில், தலித் சமூகம் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. தலித்துகளுக்கு எதிராக தங்கள் கரங்களை உயர்த்துவதற்கான தைரியம் அவர்களுக்கு வந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, தலித் ஆண்கள் யாரும்படுகொலை செய்யப்படவில்லை என்றாலும் பிற வகையான தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. உதாரணமாக, தலித்துகள் சில இடங்களில் குதிரையிலேறிச் செல்ல முடியாது, சில இடங்களில் மீசை வளர்க்கமுடியாது. சில இடங்களில் அவர்களுடைய திருமண ஊர்வலம், ஆதிக்க சாதித்தெருக்கள் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இவற்றையெல்லாம் தலித் சமூகத்தை ஒடுக்குவது என்று கூறுவதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?உனா சம்பவம் பெரும்பாலான மக் கள் கவனத்திற்கு வந்த போதிலும், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தலித்துகள் மீது நடத்தப்பட்ட ஒரேயொரு தாக்குதலாக அது மட்டுமே இருக்கவில்லை.


ராஜ்கோட்டில் தலித் ஒருவர் அடித்தே சாகடிக்கப்பட்ட போது, செய்தி ஊடகங் கள் எதுவும் பேசாது அமைதி காத்தே நின்றன.இவர்களின் அடக்குமுறைக்கான ஆதாரமாக தலித்துகள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்கள் மட்டுமே இருக்கவில்லை. ஆதிவாசிகளுக்கு ஆதரவாகஅல்லது அரசாங்கத்திற்கு எதிராக, கொடூரமான முதலாளித்துவவாதிகளுக்கு எதிராக நிற்கின்ற மனித உரிமை ஆர்வலர்களும்கூட இவர்களால் கைது செய்யப்படுகிறார்கள்.தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்கள் அல்லது செயற்பாட்டாளர்களின் கைதுகள் போன்றவை அரசாங்கத்தின் தோல்வியிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப இவர்கள் செய்யும்தந்திரத்தின் ஒரு பகுதியாகவே இருக் கின்றது. வேலை வாய்ப்புகள் குறித்து ஆரவாரமான வாக்குறுதிகளை பிரதமர் அளித்த போதிலும், வேலைகள் உருவாக்கப்படவில்லை. கடந்த 45 வருடங்களைக் காட்டிலும் மிக அதிகமாக வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது. செயற்பாட்டாளர்களின் கைது என்பதுபொதுமக்கள் மற்றும் எதிர்ப்பவர்களிடையே பயத்தை உண்டாக்கும் நோக் கத்தை மட்டுமே கொண்டிருக்கிறது என்றே நான் கூறுவேன். அறிவிக்கப் படாத நெருக்கடிநிலைக் காலம் ஒன்றிலேயே நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.


மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்படுவதைக் காணும் போதும், பீமா கோரேகானைப் பற்றி உரத்த குரல்கள் எழுப்பப்படும் போதும், இந்த ஆளும்கட்சியானது ஆதிவாசிகள், தலித்துகள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு எதிரான சித்தாந்தங்களைத் தன்னிடம் கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஆதிவாசிகளுக்கு ஆதரவாகவும், ஆதிவாசிகளின் கலாச்சாரத்தை அழிக்கின்ற வகையில் செயல்படுகின்ற பெருநிறுவனங்களுக்கு எதிராகவும் தங்களுடைய குரலை எழுப்புவதாலேயே இந்த செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். 1925-ஆம் ஆண்டு முதலாகவே பாஜகமற்றும் அதன் முன்னோடிகள் தங்களிடம் வைத்துக் கொண்டிருக்கின்ற தீய செயல்பாடுகளின் வெளிப்பாடாகவே இந்த கைது மற்றும் ஒடுக்குதல்கள் போன்ற நிகழ்வுகள் இருக்கின்றன. ஜூனாய்த் அல்லது அக்லாக்கை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அனைவரும் இன்றைக்கு சுதந்திரமாக வெளியே சுற்றி வருகிறார்கள் என் றால், அது அவர்களுடைய அரசியல் எஜமானர்களாலேயே சாத்தியமாகி இருக்கிறது. அவர்களுடைய திட்டத்தின் ஒரு பகுதியாகவே அது நடக்கிறது. நான் ஏற்கெனவே சொன்ன பயம் குறித்ததாகவே அதுஇருக்கிறது. எனவே, மீண்டும் அவர்கள் ஆட்சிக்குவந்து விடக் கூடாது என்பதை தேர்தல்கள்மூலமாக வாக்காளர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இந்த தீய சக்திகள் அரசியல் அதிகாரத்திலிருந்து அகற்றப்படும் போது, உள்ளுர ஊடுருவியிருக்கின்ற விஷத்தை அகற்றுவதற்கான முயற்சிகளை நாம் சமூக மட்டத்தில் வேலை செய்து மேற்கொள்ள வேண்டும்.


நம் முன்பாக இருக்கின்ற வழி என்ன?பாஜக அல்லது மோடியை நாம் அகற்ற வேண்டுமா?

பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக மனுவாலும், சுதந்திரம் அடைவதற்கு முன்னர் கோல்வால்கராலும் கற்றுக் கொடுக்கப்பட்ட பிராமணிய, சாதிய, பாசிசத் தன்மைகளைக் கொண்டதாக பாஜகவின் செயல்பாடுகள் இருப்பதால் இரண்டையுமே நாம் அகற்ற வேண்டும். ஆர்எஸ்எஸ் போன்ற சக்திகளே தற்போதைய ஆளும் அரசியல் தலைவர்களை வளர்த்தெடுத்துள்ளன. பாஜகவை அகற்றிவிட்டு, “மோடி வேண்டாம், அமித் ஷா வேண்டாம்” என்று நாம் சொல்ல வேண்டும். இவ்வாறு ஜிக்னேஷ் மேவானி குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் : டாக்டர் டி. சந்திரகுரு

;