பொள்ளாச்சி, ஜன.11- பொள்ளாச்சியில் வணிக வரித்துறை சார்பில் சமத்துவப் பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் அமைந்துள்ள வணிக வரித்துறை அலு வலகத்தில் துணை ஆணையர் சீனிவாசன் தலை மையில் வெள்ளியன்று சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பொள்ளாச்சி மற்றும் உடுமலை, வால்பாறை அலுவலக கிளைகளிலி ருந்தும் வணிக வரித்துறை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், அலுவலர்கள் மற்றும் ஊழியர் கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.