tamilnadu

திருமண ஆசை காட்டி சிறுமி கடத்தல் போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

கோவை, ஜூலை 1- கோவையில் சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்திச் சென்ற இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை, குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி காணாமல் போனதாக கடந்த ஞாயிறன்று சிறுமி யின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த னர். இப்புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த குனியமுத்தூர் காவல்துறையினர் காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர்.

இந்நிலையில் காணாமல் போன சிறுமியும், கோவை இடையர் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹர்ஷாத் என்ற இளை ஞரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தது தெரியவந்தது.  இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணை யில் இளைஞர் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று கோவையில் உள்ள தனது நண்பர் வீட்டில் வைத்தி ருந்தது  தெரியவந்தது. இதனை அடுத்து ஹர்ஷதை கைது செய்த காவல்துறையினர் சிறுமியை பத்தி ரமாக மீட்டனர். மேலும் ஹர்ஷாத் மீது கடத்தல் மற் றும் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

;