tamilnadu

img

ஊரடங்கை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மின்துறை பி.ஆர்.நடராஜன் எம்.பி., கண்டனம்

கோவை, ஜூன் 01- ஊரடங்கை பயன்படுத்தி கூடுதல் கட்டணத்தை நுகர்வோர் தலையில் சுமத்தும் மின்துறைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24 ஆம் தேதி  முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் மின் நுகர்வோருக்கு கட்ட ணம் செலுத்துவதற்கான இறுதி தேதி மே மாதம் வரை  நீட்டிக்கப்பட்டிருந்தது. மின்வாரியமும் மார்ச், ஏப்ரல், மாதத்துக்கான கட்டணத்தையும், அதற்கு முந்தைய மாத கட்டணத்தையும் கட்டலாம் என அறிவித்திருந்தது.

 இந்நிலையில்,  கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 310 யூனிட்களுக்குள் பயன்படுத்தி வந்த மின்நுகர்வோர்,  ரூ. 560 கட்டணமாக கட்டிய நிலையில்,  தற்போது பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு மொத்தமாக 1240 யூனிட் என கணக்கிட்டு ரூ.4584- கட்டணத்தை செலுத்துமாறு கோவையைச் சேர்ந்த பத்மநாதன் என்ற நுகர்வோரை மின்வாரியம் குறிப்பிட்டுள்ளது. அதாவது ஒரு யூனிட் பயன்பாடுக்கு ரூ.1.80 கட்டணம் செலுத்தி வந்த நிலையில், தற்போது ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.3.60 கட்டணமாக செலு த்துமாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது. இது அந்த ஒரு மின் பயனீட்டாளருக்கு மட்டும் கிடையாது. அனைத்து மின் பயனீட்டாளருக்கும் இது பொருந்தும். அரசு அறிவிப்பின்படி, 100 யூனிட் குறைவாக பயன் படுத்தும் நுகர்வோருக்கு மாத கட்டணம் ஏதும் வசூல் செய்யப்படுவது இல்லை. அதேபோல், மாநில அரசு, ஒவ்வோரு குறிப் பிட்ட யூனிட் அளவுக்கு மேல் பயன்படு த்தும் பயனீட்டாளர்களுக்கு கூடுதல் கட்ட ணத்தை நிர்ணயித்து வருகிறது.

இதன்படி மின்சார பயன்பாட்டுக்கு ஏற்ப ஒரு யூனிட்டு க்கான கட்டணமும் மாறும்.    தற்போது கொரோனா காலத்தில்,  மின் வாரியம் எவ்வித கட்டண சலுகையும் மின் பயன்பாட்டின்படி அளிக்காமல் மூன்று மாதத்துக்கான மொத்த பயன்பாடு மின் யூனிட்டையும் கணக்கிட்டு, அதற்கான தொகையை செலுத்துமாறு கூறியுள்ளது.  இது ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டும் அல்லாமல் மாத வருமானம் இழந்து தவிக்கும் சாதாரண மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றும் செயல் ஆகும். தொழில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலை யில், பெரும்பாலான மக்கள் அடிப்படை தேவை களுக்கு கூட திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலை யில் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்துதான் தொழில் களுக்கு கட்டுப்பாடுகளுடன் பகுதி தளர்வு அளிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் பெரும்பாலான தொழில்கள் தொடங்கப்படாமல் முடங்கியுள்ளதால் மக்கள் வரு மானம் இன்றி தவித்து வருகின்றனர்.  மின் கட்டண த்தில் இருந்து விலக்கும் அளிக்குமாறு சிறு, குறு தொழில் அமைப்புகள் கோரி வருகின்றன. இந்நிலை யில் கட்டணத்தை மறைமுகமாக ஏற்றியுள்ளதோடு, வரு மானத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு கூடுதல் நெருக் கடி தரும் வகையில் மின்வாரியத்தின் செயல்பாடு இருக் கிறது. இது கண்டிக்கத்தகுந்தது.  இந்த போக்கை மின்வாரியம் உடனடியாக கைவிட வேண்டும் என்றார்.

;