tamilnadu

img

ஐடிஐ பயிற்சியாளர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பம்

தமிழ்நாட்டில் ஐடிஐ எனப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ பயிற்சி பெற 8-ம்‌ வகுப்பு / 10-ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்‌ விண்ணப்பங்களை https://www.skilltraining.tn.gov.in/ என்ற இணையதளத்கில்‌ நாளை (10.05.2024) முதல்‌ விண்ணப்பிக்கலாம்‌. அதற்கான கடைசி தேதி 07.06. 2024 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .

இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள், தமிழ்நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 136 உதவி மையங்கள் மூலம் சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால், தொடர்பு கொள்வதற்கு அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் வாட்ஸ் ஆப் எண் வழங்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும்‌ மின்னஞ்சல்‌ முகவரியிலும்‌ அலைபேசி எண்ணிலும்‌ தொடர்பு கொள்ளலாம்‌.

மின்னஞ்சல்‌ முகவரி : itiadmission2024@gmail.com

அலைபேசி எண்‌ மற்றும்‌ whatsapp எண்‌: 9499055689

இவ்வாறு வேலை வாய்ப்பு மற்றும்‌ பயிற்சித் துறை ஆணையர்‌ தெரிவித்துள்ளார்.

 

;