tamilnadu

img

ஆன்லைன் கடன் செயலியால் இளைஞர் தற்கொலை!

சென்னையில் ஆன்லைன் கடன் செயலியில் கடன் வாக்கிய இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த கோபிநாத் என்ற இளைஞர் ஆன்லைன் கடன் செயலி மூலம் வாங்கிய கடனை முழுவதும் கட்டிய பின்னரும், அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது தொலைப்பேசியில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எண்களுக்கு கடன் செயலி நிறுவனத்தினர் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலிலிருந்த கோபிநாத் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த முழு விவரத்தையும் கோபிநாத் வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த எழும்பூர் போலீசார் கோபிநாத் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

;