tamilnadu

img

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி - சென்னை மாநகராட்சி அறிவிப்பு  

சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மாநகராட்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்குச் சிகிச்சை அளிக்கவும், தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசிகள் அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகின்றன. மேலும் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னையில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படும் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதன்படி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 80 வயதிற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்த 044-2538 4520, 044-4612 2300 ஆகிய தொலைப்பேசி எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

;