tamilnadu

img

ஊரடங்கு உத்தரவு மீறல்: 7.4 லட்சம் பேர் மீது வழக்கு

சென்னை:
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 7.4 லட்சம் பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர்கள் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.தமிழகம் முழுவதும், 7 லட் சத்து 4 ஆயிரத்து 113 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 லட்சத்து 48 ஆயிரத்து 809 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சத்து 17 ஆயிரத்து 497 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட் டன. ரூ.14 கோடியே 69 லட்சத்து 93 ஆயிரத்து 510 அபராதம் வசூ
லிக்கப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;