tamilnadu

img

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல், வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், வாக்குப்பதிவு நாள் அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், வாக்குப்பதிவு நாளன்று தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
 

;