tamilnadu

4 தொகுதி இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு: திருமாவளவன்

சென்னை, ஏப்.12 -நீதிமன்றத்தின் தலை யீடு காரணமாகவும் எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலாலும் தற்போது அறிவிக்கப் பட்டுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட நான்கு தொகுதி களுக்கான இடைத்தேர்தல் மே மாதம் 19 ஆம் தேதிநடத்தப்படும் என தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக வுக்கு முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது. மக்களவை தேர்தலோடு அதை நடத்தாமல் தனியே நடத்துவது ஆளுங்கட்சியின் முறைகேடுகளுக்கு உதவிசெய்வதாகவே கருத வேண்டியுள்ளது. இத்தகைய நம்பகத்தன்மையற்ற நடவடிக்கை களில் தேர்தல் ஆணையம் இனிமேல் ஈடுபடாது எனநம்புகிறோம் என்று அறிக்கை ஒன்றில் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

;