tamilnadu

மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் மறைவு....

சென்னை:
கடந்த 30 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றிய மூத்த நிருபர் வி.பாண்டியன் ஞாயிறன்று (மே 30) அதிகாலை காலமானார்.

கொரோனா தொற்றால் கடந்த ஒரு மாதகாலமாக சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஞாயிறன்று காலமானார்.இந்தியன் ஏஜ் ஆங்கில இதழில் நிருபராக பணியாற்றி பின்பு தெலுங்கானாவில் இருந்து வெளி வரும் தீஷா தெலுங்கு நாளிதழில் நிருபராக பணியாற்றி வந்தார்.

சிதம்பரம் ராஜா
சிதம்பரம் பத்திரிக்கையாளர் முன் னேற்ற சங்கத்தின் நிர்வாகியும் மாலைமுரசு தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வந்த ராஜா, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். ராஜா மறைவுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.சென்னை மற்றும் சிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் மறைவுக்கு டியுஜே மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

;