“ஜி-20 மாநாடு நடைபெற்ற போது அதன் இலச்சினையையும் காவி நிறத்தில் தான் பாஜக அரசு, இடம் பெறச் செய்திருந்தது. தற்போது அதே போல பிரச்சார் பாரதியும் தொலைக்காட்சி செய்தி அலைவரிசைகளின் இலச்சினையைக் காவி நிறத்தில் மாற்றியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தேர்தல் ஆணையம் இறையாண்மையுள்ளதாகப் பாரபட்சம் இன்றி செயல்படுமானால் உடனடியாக இதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. கூறியுள்ளார்.